tamilnadu

img

கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம்...

மதுரை:
கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏன்?- எனமதுரை அரசு மருத்துவமனை முதன்மையர், கொரோனா சிறப்பு அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளதுமதுரையில் தனியார் மருத்துவமனைகளில் அவசரச் சிகிச்சை பெறவருவோருக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் வராமல் உரிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை எனத் தெரியவருகிறது. இது எவ்வாறு ஏற்கத்தக்கதாகும்? என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வியெழுப்பியுள்ளது,

முன்னதாக, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் பதிவாளர் தரப்பில் கொரோனாதடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஒருமனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அந்த மனுவில்,” மதுரையில் தீவிரமாக நோய்த்தொற்று பரவி வரும் சூழலில் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியிடப்படுவதில் தாமதம் ஏற் படுகிறது, தாமதத்தின் காரணமாக நோய்த் தொற்று அதிகரிக்கும் வாய்ப்புஉள்ளது என நாளிதழ்களில் செய்தி வெளியாகி உள்ளது.கொரோனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு முறையான கழிவறை, படுக்கைகள் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படவில்லை. பயன்படுத்தப்பட்ட படுக்கைகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தப் படுகின்றன என்பது போன்ற செய்திகளும் வெளியாகியுள்ளன.
இவற்றைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் சில கேள்விகளையும் அதற்கானவிடைகளையும் பெற விரும்புகிறது. அதனடிப்படையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தானாக முன்வந்து இதனை வழக்காக பதிவு செய்கிறது எனக் கூறியநீதிபதிகள், “கொரோனா நோய்த்தொற்று பரிசோதனைகளை சுழற்சி முறையில் மேற்கொள்ளவும், துரிதமாக சோதனைகளை முடிக்கவும், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் தயாராக உள்ளனரா? பிசிஆர் பரிசோதனை கருவிகள் உள்ளனவா?”
“கொரோனா பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படுவதில் ஏற்படும் தாமதத்திற்கு என்ன காரணம்?”“கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்கள் சிகிச்சை பெறும் வார்டுகள், தனிமைப்படுத்துதல் முகாம்களில் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்த விபரங்கள் என்ன?”

“தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது அல்லது எரியூட்டுவதற்காக என்ன வசதி செய்யப்பட்டுள்ளது?”“முன்களப் பணியாளர்களாக இருக்கும் மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள், பாரா மருத்துவ ஊழியர்கள் ஆகியோருக்கு தேவையான பிபிஇ உடைகள் உள்ளனவா?  என்பதுபோன்ற கேள்விகள் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தன.இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போதுஅரசு தலைமை மூத்த வழக்கறிஞர் செல்லப்பாண்டியன் ஆஜராகி,” மதுரையில் இதுவரை 1,07,167 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 8,358 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், புதிய பல்நோக்கு மருத்துவமனையில் உள்ள 594 படுக்கைகளையும் சேர்த்து மொத்தம் 1461 படுக்கைவசதிகள் சிகிச்சைக்காக ஒதுக்கப்பட் டன. இவற்றில் 723 படுக்கைகளில் நோயாளிகள் உள்ளனர். 738 படுக்கைகள் காலியாக உள்ளன. மதுரை மாவட்டத்தில் 30 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை வழங்கப்படுகிறது. 28 மதுரை நகர் பகுதியிலும், ஒன்று உசிலம்பட்டியிலும், மற்றொன்று திருமங்கலத்திலும் உள்ளது.அரசு மருத்துவமனையில் ஆறு கொரோனா பரிசோதனைக் கருவிகள் உள்ளன.

160 லேப் டெக்னீஷியன்கள், 90 மைக்ரோ பயாலஜி மருத்துவர்கள் உள்ளனர்.தியாகராசர் பொறியியல் கல்லூரி,மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அரசு விவசாயக் கல்லூரி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி ஆகியவை தனிமைப்படுத்துதல் முகாம் களாக பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் 2,470 படுக்கை வசதிகள் உள்ள நிலையில், 2,225 படுக்கைகள் காலியாக உள்ளன. இறந்தவர்களின் உடல் மதுரை தத்தனேரி மற்றும் மூலக்கரை மயானங்களில் தகனம் செய்யப் படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டது.அதற்கு நீதிபதிகள், உடல்களை அடக்கம் செய்ய 10 ஆயிரம் முதல் 15ஆயிரம் வரை வழங்க நிர்பந்திக்கப்படுவதாக கூறப்படுகிறதே எனத் கேள்வியெழுப்பினர். அதற்கு அரசுத்தரப்பில் அது போல கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. அவ்வாறு பணம்கேட்பவர்கள் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.அதையடுத்து நீதிபதிகள் தனியார் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பெற வருவோருக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் வராமல் உரிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை எனத் தெரியவருகிறது. இது எவ்வாறு ஏற்கத்தக்கதாகும்? என கேள்வி எழுப்பினர்.கொரோனா பரிசோதனை முடிவுகள் வருவதில் ஏன் தாமதம் ஏற்படுகிறது? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது தொடர்பாக மதுரை அரசு ராஜாஜிமருத்துவமனை முதன்மையர்,  மதுரைமாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் ஆகியோர் விரிவான நிலை அறிக்கையை தொடர்புடைய ஆவணங்களுடன் தாக்கல் செய்யவும், இது குறித்துமத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்அனுப்பவும் உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

;